சிஆர்ஆரை உயர்த்தியது ரிசர்வ் வங்கி!
டெல்லி: வணிக வங்கிகள் கட்டாயமாகக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகித அளவு 75 புள்ளிகள் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
இதன்படி தற்போது 5.75 சதவீதமாக இந்த மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவே என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் அளவுக்கதிகமான பணப்புழக்கம் உறிஞ்சப்படும். உபரி ரொக்கம் குறைவதால் விலைநிலை சற்று மட்டுப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிஆர்ஆர் மதிப்பு உயர்த்தப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications