பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் 'ஆவணம்' சிபிஐக்குக் கிடைத்துள்ளது - ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்து விட்டதாக இலங்கை அரசு கூறியது. இதையடுத்து ராஜீவ காந்தி வழக்கை மூடுவதற்கு வசதியாக, மரண சான்றிதழை அளிக்குமாறு மத்திய அரசு கோரியிருந்தது.
ஆனால் இதுவரை அது வரவில்லை. இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சிபிஐயிடம் கேட்கப்பட்ட ஒரு தகவலில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தி ஆவணம் ஒன்றை இலங்கை அனுப்பியுள்ளது. அதேசமயம், இதுவரை மரணச் சான்றிதழ் வரவில்லை என்று சிபிஐ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று டெல்லியில் சந்தித்த ப.சிதம்பரத்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை இலங்கை அரசு தங்களுக்கு தரப்பட்டுள்ளதாக சிபிஐ என்னிடம் தெரிவித்துள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications