பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
நெல்லை: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த மருத்துவக் கல்லூரி காதல் ஜோடி ஒரே நேரத்தில் தனித்தனி இடங்களில் தற்கொலை செய்து இறந்தனர்.
திருவனந்தபுரம் மேலரன்னூர் பகுதியை சேர்ந்தவர் சுனித்குமாரின் மகன் ஜனாப் சுனில். நெல்லையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.டி.எஸ் படித்து வந்தார்.
திருவனந்தபுரம் பிரவச்சம்பலம் பகுதியை சேர்ந்த சிவராஜேந்திரனின் மகள் அமலா. இவர் எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சுனில், அமலா ஆகியோர் பிளஸ்டூ வரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். அப்போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
கல்லூரியில் சேர்ந்த பிறகும் இவர்கள் ஒன்றாக பழகி வருவதை அறித்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அமிர்தா மருத்துவமனையின் 16வது மாடியில் இருந்து குதித்து அமலா தற்கொலை செய்து கொண்டார். சுனில் அதே நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள கார் ஷெட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இருவரும் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளனர். அதில் 8 வருடமாக தொடர்ந்த காதலை பிரிக்க பெற்றோர் முயற்சிப்பதால் தற்கொலை செய்து கொள்வதாக இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications