ஏப்ரல் 9ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்

சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி வருவதால் அதற்குள் தேர்தலை முடித்து விட திட்டமிட்டுள்ளாராம் அவர்.
இதுகுறித்து திவயின என்ற சிங்களப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சுதந்திர தினத்திற்கு மறு தினம் நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்படும். ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ரூ. 180 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாம். தேர்தல் தொடர்பான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டதாக தெரிகிறது.
அதேசமயம், தன்னை பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு சமீபத்தில் தேர்தல் ஆணையர் தயானந்த திஸநாயகே கூறியிருந்தார். மேலும், அதிபர் தேர்தலின்போது பெருமளவில் தான் நெருக்கடிக்குள்ளானதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே அவர் தேர்தல் ஆணையராக நீடிக்க ராஜபக்சே அனுமதிப்பாரா அல்லது புதிய ஆணையரை நியமிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications