தமிழ் ஈழ தனியரசு அமைய 99.33% இங்கிலாந்து தமிழர்கள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
லண்டன்: தமிழ் ஈழ தனியரசு அமைய வேண்டும் என்று கோரி இங்கிலாந்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 99.33 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இதில் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கேற்ப தமிழ் ஈழ தனியரசு அமைய வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வியுடன் கூடிய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் 99.33 சதவீத தமிழர்கள் தமிழ் ஈழ தனியரசு வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.
லண்டனில் உள்ள பார்க் லேன் ஷெரட்டன் ஹோட்டலில் நடந்த இந்த வாக்கெடுப்பு, பத்திரிக்கையாளர்கள், இங்கிலாந்து எம்.பிக்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்து முடிவு அறிவிக்கப்பட்டது.
மொத்தம் வாக்களித்த 64,692 வாக்காளர்களில் 64,256 வாக்காளர்கள் தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு ஆம் என்றும் 185 வாக்காளர்கள் இல்லை என்றும் 251வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளன.













Click it and Unblock the Notifications