லண்டன் நகரில் மட்டும் நிதித்துறையில் 48000 பேர் வேலை இழப்பு
Subscribe to Oneindia Tamil
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லண்டனில் 17000 மூத்த நிதித் துறை அலுவலர்கள் உள்பட 48000 பேர் பதவி இழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
லண்டன் மாநகரில் இருந்த டாப் நிதி நிறுவனங்களில் இருந்த மூத்த அதிகாரிகலில் 10 சதவிகிதத்தினர், அதாவது 17000 பேர், இன்சால்வென்ஸி, விஆர்எஸ் போன்ற பல்வேறு காரணங்களால் வேலை இழந்திருக்கிறார்களாம்.
இந்த எண்ணிக்கை தனிப்பட்ட நபர்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளதாகவும், பெரும் நிறுவனங்களில் பதவி இழந்து பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
நிதித் துறையில் மட்டுமே இந்த இரு ஆண்டுகளில் 48000 அதிகாரிகள் வேலை இழந்துள்ளார்களாம்.
அதே நேரம், பிரிட்டனில் இன்ணும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறி தெரியவில்லை என ஐஎம்ஏஎஸ் கார்ப்பரேட் அட்வைஸர்ஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications