தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க பாமக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் விவசாயிகள் பெரிதும் நம்பியிருந்த வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது.

கடலூர் தவிர தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏரி, குளம், குட்டை, விவசாயி கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன.

வறட்சி காரணமாக விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட இன்றி பெண்கள் காலி குடங்களுடன் அலையும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

தொழில் இல்லாத மிகவும் பின்தங்கிய பகுதியாக தர்மபுரி மாறியதால், இங்குள்ள மக்கள் தஙகளது குடும்பத்தோடு பெங்களூரு, ஆந்திரா, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகர புறங்களுக்கு வேலைக்காக அகதிகள் போல் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரண உதவிகளை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

அடுத்த ஆண்டு மழை பெய்து விளைச்சல் உண்டாகும் வரை, ஒவ்வொரு குடும்பத்துக்கு மாதம் 5,000 ரூபாயும், கிணற்று பாசணத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் உடனடியாக போர்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களை அரசவ கால நடவடிக்கையாக உடனே துவங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனே நிறைவேற்ற வேண்டும்.

இதை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 4 ம் தேதி பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+