திமுக ஆட்சியில் புதுப்புது நோய்கள்: அதிமுக குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க​ ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் புதுப்புது நோய்கள் பரவி வருவதாக அ.தி.மு.க​ குற்றம் சாட்டியுள்ளது.

சென்னையில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலைத் தடுக்கக் கோரியும்​ அ.தி.மு.க​ சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். அப்போது அவர் பேசுகையில்,

'தமிழகத்தில் தி.மு.க.​ ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் டெங்கு காய்ச்சல் பரவியது.​ அடுத்து பறவைக் காய்ச்சல்,​​ தொடர்ந்து சிக்குன்குனியா,​​ பன்றிக் காய்ச்சல் என பல நோய்கள் பரவின.​

இப்போது தமிழகமெங்கும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது.​ இந்த நோய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னை நகரில் தினமும் படுகொலைகள் நடைபெறுகின்றன.​ வடசென்னை பகுதியில் கோயில்களில் கொள்ளை நடைபெறுகின்றன.​

இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பது காவல்துறைக்கு தெரியும்.​ ஆனால் யாரும் கைது செய்யப்படுவதில்லை.​

தமிழகத்தில் நிலவும் இத்தகைய அவலங்கள் நீங்க, மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க​ ஆட்சி மலர வேண்டும்.​ அந்நிலை விரைவில் வரும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+