விலைவாசி அடுத்த சில வாரங்களில் குறையும்: பிரதமர்

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு துவங்கியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, காங்கிரஸ் தலைமையின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் உட்பட பல் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
விலைவாசி உயர்வு, தெலுங்கானா விவகாரம் மற்றும் வருகிற பொது பட்ஜெட் ஆகியவை கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு குறித்து கூட்டத்தில் விவாதம் நடந்தபோது, ஓரிரு வாரத்தில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று பிரதமர் தனது தரப்பு வாதத்தை அழுத்தமாக பதிவு செய்ததாக கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.
'விலைவாசியை கட்டுப்படுத்த அந்தந்த மாநில முதல்வர்களுடன் கலந்துபேசி பல்வேறு தேவையான நடவடிக்கைகளை மத்திய செயல்படுத்தியுள்ளது.
அந்த நடவடிக்கைகளின் விளைவுகள் அடுத்து வரவுள்ள சில வாரங்களில் வெளிப்படும் என பிரதமர் காரிய கமிட்டியில் உத்தரவாதம் அளித்திருக்கிறார்' என்றார் மணிசங்கர்.
கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்களும் விலைவாசியை கட்டுப்படுத்த கள்ளச் சந்தை செயல்பாட்டை தடுப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மத்திய அரசின் ஆலோசனைப் படி மேற்கொண்டிருப்பதாக காரிய கமிட்டி கூட்டத்தில் விவரித்தனர்.












Click it and Unblock the Notifications