சத்யம் மோசடி: பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் ஆடிட்டருக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சத்யம் மெகா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் ஆடிட்டர் பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டர் ஸ்ரீனிவாஸ் தல்லூரிக்கு உச்சநீதி மன்றனம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7,800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சஞ்சாலகுடா சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் 10 முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடைசியாக மகிந்திரா சத்யம் துணைத் தலைவரும், ஆடிட் பிரிவு பொறுப்பாளருமான பிரபாகர் குப்தாவும் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து இவர்கள் ஜாமீனுக்கு முயன்று வருகிறார்கள். ஆனால் பல்வேறு நீதி மன்றங்களிலும் ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் அதன் தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ்ஹவுஸ் ஆடிட்டர்கள் ஸ்ரீனிவாஸ் தல்லூரி மற்றும் கோபாலகிருஷ்ணன்.

இவர்களில் ஸ்ரீனிவாஸ் தல்லூரி மட்டும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். தேவைப்படும்போது எந்த தடங்கலுமின்றி நீதிமன்றத்துக்கு வருவதாக அவர் சிபிஐக்கு உறுதி அளித்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+