கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் கன்னியாகுமர் கடலோரப் பகுதியில், பேரிடர் மேலாண்மை மற்றும் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன.
கன்னியாகுமரி, ராமேஸ்வரம், உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் நடந்தது.
இதில் தேசிய பேரிடர் மேலாண்மை முதுநிலை நிபுணர் பிரிகேடியர் பிகே கண்ணா பங்கேற்றார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு, எஸ்பி ராஜேந்திரன், உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொணடனர்.
சுனாமி, கடல் சீற்றம், உள்ளிட்டவை ஏற்பட்டால் மீட்பு பணிகளை எப்படி மேற்கொள்வது, என்று பிரிகேடியர் கண்ணா விளக்கமளித்தார். பின்னர் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பது பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications