விமானப் படையில் தமிழகத்தின் பங்களிப்பு 3% மட்டுமே!
சென்னை: இந்திய விமானப் படையில் தமிழர்களின் பங்களிப்பு 3 சதவீதம் மட்டுமே இருப்பதாக தலைமை பயிற்சி கமாண்டர் வி.ஆர்.அய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானப் படையின் பெங்களூர் பிரிவு தலைமை பயிற்சி கமாண்டர் விஆர்.அய்யர் சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சென்னை ஆவடி மற்றும் தாம்பரம் பகுதிகளில் இயங்கிவரும் விமானப்படை பயிற்சி நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை என்பதால் அதுதொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு முதல்வரிடம் கேட்டுள்ளோம்.
விமானப் படையில் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு 40 சதவீதம் உள்ளது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு 3 சதவீதம் மட்டுமே உள்ளது.
தமிழகத்தில் விமானப் படை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் விவாதித்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications