வீரப்பன் புதைத்த பணமூட்டை: மேட்டூர் அருகே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: சந்தனக் கடத்தல் வீரப்பன் பதுக்கி வைத்த பணமூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கிளம்பிய வதந்தியால் மேட்டூர் அருகே உள்ள கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக-கர்நாடக எல்லையில் மேட்டூர் அருகே கோவிந்தப்பாடி கிராமம் உள்ளது. அங்குள்ள விவசாய நிலத்தில் விளையாடச் சென்ற மாணவர்கள் அப்பகுதியில் பண மூட்டைகளை கண்டதாக பலரிடம் கூறினர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டோரை வீரப்பன் கடத்திய சமயத்தில் கைமாறியதாகக் கூறப்படும் பணத்தை இப்பகுதிகளில் பதுக்கி வைத்ததாக கிராமவாசிகள் பேசிக்கொண்டனர்.
இதனால் கிராம மக்களிடை திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் போலீசார் இத்தகவல் உண்மையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications