இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதல்-தடுக்கக் களம் இறங்கினார் ஷான் வார்னே

இந்தப் பிரச்சினை தொடர்பாக விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும், தாக்குதல்களை தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் பிரம்பியுடன் வார்னே ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தின்போது என்ன மாதிரியான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து வார்னே எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பிரம்பி கூறுகையில், உள்ளூர் ஆஸ்திரேலியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையிலான பதட்டத்தைக் குறைக்க வார்னேவின் சேவைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
நட்புரீதியிலான கிரிக்கெட் போட்டி போன்ற ஏதேனும் இடம் பெறலாம். மேலும் விக்டோரியா மாகாணம் குறித்த சாதகமான விஷயங்கள் பெரிதுபடுத்தப்படலாம்.
இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், இந்தியர்களிடையே நம்பிக்கையை விதைக்கவும் விக்டோரியா மாகாணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு உதவ வார்னே முன்வந்துள்ளார்.
எந்த ஒரு இனத்தினருக்கு எதிரான வன்முறையும் நாம் அனுமதிக்கவில்லை, ஆதரிக்கவில்லை. மாறாக கண்டிக்கிறோம். இந்தப் பிரச்சினையை உரிய முறையில் அணுக விக்டோரியா மாகாணம் உறுதியுடன் உள்ளது என்றார் பிரம்பி.
சிவசேனா மிரட்டல் எதிரொலியா...?
ஷான் வார்னே ஐபிஎல்லின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த நிலையில்தான் ஷான் வார்னே பதட்டத்தைத் தணிக்க விக்டோரியா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
விரைவில் ஐபிஎல் 3வது போட்டித் தொடர் தொடங்கவுள்ளதால் வார்னே இந்தியா வந்த விளையாட வேண்டியுள்ளது. அதேபோல ஆஸ்திரேலிய வீரர்களும் விளையாட ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் சிவசேனாவின் மிரட்டலால் அவர்கள் இந்தியா வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் பதட்டத்தைத் தணிக்க வார்னேவைக் களம் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications