அமர்சிங் விவகாரம் முடிந்து போன ஒன்று: சமாஜ்வாடி
Subscribe to Oneindia Tamil
கான்பூர்: அமர்சிங் விவகாரம் முடிந்து போன ஒன்று. மறுபடியம் அவரை கட்சியில் சேர்க்கும் யோசனைக்கே இடமில்லை என்று சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் மோகன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமர்சிங் விவகாரம் முடிந்து போய் விட்டது. அவருக்கு கதவை மூடி விட்டோம். மீண்டும் உள்ளே வரும் வாய்ப்புக்கே இடமில்லை என்றார் மோகன் சிங்.
அமர்சிங் நீக்கப்பட்ட பின்னர் அவரது பொறுப்புக்குக் கொண்டு வரப்பட்டவர் மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications