பி.டி கத்தரி: ஆர்எஸ்எஸ் திட்டவட்ட எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய வேளான் துறையில் பிடிகத்தரிகளை அனுமதிப்பதும், தீவிரவாதிகளை நாட்டுக்குள் ஊடுருவ அனுமதிப்பதும் ஒன்று தான் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோஹன் பகவத் கூறியுள்ளார்.
பெங்களூரில் ராஷ்ட்ரிய சேவா சமிதி சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மோஹன்பகவத் இதுபற்றி கூறுகையில்,
'நமது பாரம்பரிய விவசாயம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. எனவே பிடி கத்தரி வகைகளை இந்திய விவசாயிகள் திட்டவட்டமாக ஒதுக்கவேண்டும். பி.டி கத்தரி நமது விவசாயத்தில் இணைக்கப்படுவதையும், நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதையும் நாம் சமமாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications