பலாத்காரம் செய்ததாக பெண் புகார்: ராணுவ வீரர் கைது
திருச்செந்தூர்: திருமண ஆசை காட்டி கோவில்பட்டி இளம் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வி. இவருக்கும் புளியம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ராணுவ வீரர் பாலமுருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
முத்துச்செல்வியை பாலமுருகன் திருமண ஆசை காட்டி திருச்செந்தூருக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் பாலமுருகன் ராணுவ பணிக்கு சென்று விட்டார்.
முத்துசெல்வி பலமுறை பாலமுருகனை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுக்கவே முத்துச்செல்வி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பின்னர் வழக்கு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாலமுருகன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் சோனா, விமலா ராணி புளியம்பட்டி சென்று பாலமுருகனை கைது செய்தார்.
--












Click it and Unblock the Notifications