திருச்சியில் தனியார் டிவி செய்திவாசிப்பாளர் காதலருடன் மாயம்
திருச்சி: திருச்சியில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றும் தீபா என்பவர் தனது காதலருடன் மாயமாகி விட்டார்.
திருச்சியை சேர்ந்தவர் தீபா (23). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அதே கல்லூரியில் 2 -ம் ஆண்டு படித்து வருகின்றார் வீரா என்ற மாணவர்.
இவர்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் சாதாரண பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் முற்றி காதலாக கனிந்துள்ளது. இந்த விஷயம் கல்லூரிக்கு தெரிய வந்ததும் பேராசிரியை வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.
இதனையடுத்து, அவர் திருச்சியில் உள்ள ஒரு உள்ளுர் தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4 ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபா - வீரா ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications