சென்னை அருகே இளைஞர் கழுத்தை அறுத்துக் கொடூரக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அடையாளம் தெரியாத நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் அருகே இன்று காலை சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அப்பகுதி மக்கள் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டுச் சென்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பிணமாகக் கிடந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையானவர், புளூ கலர் ஜீன்ஸ் பேண்டும், அதே கலரில் டி.சர்ட்டும் அணிந்திருந்தார். வழுக்கை தலையுடன் காணப்பட்டார். அவரை அடையாளும் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications