வரலாற்றுச் சின்னமா, குவாரி மலையா: கிராம மக்கள் கொதிப்பு!
மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள யானைமலை குன்றை தனியார் குவாரிக்கு குத்தகைக்கு விடப்படுவதை எதிர்த்து சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையி்ட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை, ஒத்தக்கடை அருகே உள்ள யானைமலை குன்றை அப்பகுதியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, சுற்றுப்புறத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெய்வீக சின்னமாக வழிபட்டு வருகின்றனர்.
மேலும் அங்குள்ள குகைப் பகுதிகளில் வரலாற்றுக் காலத்தின் கல் ஓவியங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் யானை மலை குன்று தனியார் குவாரி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரளாக வந்து குவிந்தனர்.
அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், யானை மலையை குத்தகைக்கு விடக்கூடாது என வலியுறுத்தி மனு ஒன்றையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்த மக்களை மாவட்ட ஆட்சியர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications