சங்கரராமன் கொலை வழக்கு: மேலும் 7 சாட்சிகள் பல்டி
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது மேலும் 7 பேர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கில் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்ட்டனர்.
கடந்த 2004ம் ஆண்டு நடந்த இக்கொலை வழக்கின் விசாரணை புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தற்போது சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. இன்று நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் 10 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அரசு தரப்பு வக்கீல் என்.தேவதாஸ் ஆஜரானார். குற்றம்சாட்டப்பட்ட மொத்தம் 24 பேரில் 17 பேர் மட்டுமே இன்று நீதிமன்றத்தில் ஆஜனாரானார்கள். சங்கராச்சாரியார்கள் உட்பட மற்றுவர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
சாட்சிகள் விசாரணை ஒவ்வொன்றாக துவங்கியது. அப்போது 10 சாட்சிகளில் மூன்று பெண்கள் உட்பட 7 பேர் தாங்கள் ஏற்கனவே காஞ்சிபுரம் போலீசில் கொடுத்த தகவல்களுக்கு மாறாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை சங்கரராமன் கொலை வழக்கில் 26 பேர் பிறழ்சாட்சியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications