புனே குண்டுவெடிப்புக்கு அசோக் சவான் செய்த பாவமே காரணம் - உத்தவ் தாக்கரே
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், சவானின் முதிர்ச்சியற்ற அரசியலால்தான் புனேவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர் செய்த பாவங்களால்தான் 9 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன. ஷாருக் கானைக் காப்பாற்றுவற்காக முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டிருந்த போலீஸாரையும், பாதுகாப்புப் படையினரையும் தியேட்டர்களுக்குக் கொண்டு போய் குவித்து தீவிரவாதிகள் சுதந்திரமாக தாக்குதல் நடத்த வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார் சவான்.
அந்தப் பாதுகாப்பு முறையான இடங்களில், தேவையான இடங்களில் தொடர்ந்திருந்தால் இந்தத் தாக்குதலைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் உத்தவ்.












Click it and Unblock the Notifications