படகு மூலம் கடத்தப்பட்ட அரிசி, டீசல் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீ்ன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் இருந்த 3 ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் அரிசி, துணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீ்ன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன.
நேற்று முன்தினம் மாலை சின்னமுட்டம் துறைமுகத்தின் படகு தளத்தில் 3 ஆயிரம் லிட்டர் டீசல், 110 கிலோ அரிசி மற்றும் துணிகள் என பல்வேறு பொருட்களுடன் ஏழு விசைப்படகுகள் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்றபோது படகில் இருந்த 3 பேர் கடலில் குதித்து தப்பினர். படகில் பிளாஸ்டிக் டேங்குகளில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் டீசல், அரிசி துணிகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications