25 வயது நடிகை கற்பழிப்பு- 60 வயதைத் தாண்டிய இரு தொழிலதிபர்கள் கைது!
மும்பை: 60 வயதைத் தாண்டிய இரண்டு தொழிலதிபர்கள், 25 வயதான டிவி நடிகையை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை ஓஷிவாரா பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் ரேஷம்வாலா (60). இவருடைய நண்பர் சையத் ஆலிம்
(63). இருவரும் தொழிலதிபர்கள்.
இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் ஒரு டிவி நடிகையைக் கற்பழித்தாக கைதாகியுள்ளனர்.
இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா கூறுகையில், அந்த 25 வயது நடிகை சில மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு வந்தார். அங்கு தங்கி தொடர்களில் நடித்து வந்தார்.
இந்த இரு தொழிலதிபர்களிடமும் அப்பெண் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர்கள், டிவி தொடர்களில் பெரிய வேடங்கள் வாங்கிக் கொடுப்பதாகவும், நல்ல சம்பளம் பெற்றுத் தருவதாகவும், தங்க ஒரு நல்ல ஃபிளாட் தருவதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் இதைக் கூறி அந்த இருவரும் நடிகையைக் கற்பழித்துள்ளனர். அதை படமாகவும் எடுத்துக் கொண்டனர்.
பாலியல் ரீதியாக கொடுமைக்குள்ளான அப்பெண் உறுதியளித்தபடி ஃபிளாட் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இருவரும் ஏற்கனவே எடுத்து வைத்த அப்பெண்ணின் ஆபாசப் படத்தைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பெண் புகார் கொடுத்ததன் பேரில் இருவரையும் கைது செய்தோம் என்றார்.
கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 19ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுப்பி கோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications