முத்திரைத்தாள் மோசடி-தெல்கிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்​க​ளூர்:​ முத்​தி​ரைத்​தாள் மோசடி வழக்​கில் முக்​கிய குற்ற​வா​ளி​யாக அறி​விக்​கப்​பட்ட அப்​துல் கரீம் தெல​கிக்கு 10 ஆண்​டு​கள் சிறைத் தண்​ட​னை​ விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தெல்கியின் கூட்​டா​ளி​கள் 21 பேருக்கு 7 ஆண்​டு​கள் சிறைத்தண்​ட​னை​ விதிக்கப்பட்டுள்ளது.​

போலி முத்​தி​ரைத்​தாள் விற்பனை செய்து பலகோடி சம்பாதித்தாக பெங்​க​ளூர் போலீசா​ரால் கடந்த 2003ம் ஆண்டில் அப்​துல் கரீம் தெலகி உள்​பட 33 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர்.​

அவர்​கள் மீதான வழக்கு பெங்​க​ளூ​ரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது.​ நீதி​பதி சந்​தி​சே​கர பாட்​டீல் வழக்கை விசா​ரித்து வந்​தார்.​

வழக்​கில் தெலகி,​​ பக்​ரு​தீன் உள்​பட 22 பேர் மீதான குற்​றம் நிரூ​பிக்​கப்​பட்​டுள்​ள​தாக கடந்த 10ம் தேதி நீதி​பதி அறி​வித்​தார்.​
காங்​கி​ரஸ் எம்.எல்.ஏ.வும் முன்​னாள் அமைச்​ச​ரு​மான ரோஷன் பெயிக்​கின் சகோ​த​ரர் ரோகன் பெயிக் உள்​பட 11 பேர் வழக்கி​லி​ருந்து விடு​விக்​கப்​பட்​ட​னர்.​

இந்​நி​லை​யில் வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளியான தெல​கிக்கு 10 ஆண்​டு​கள் சிறைத்​தண்​ட​னை​யும் ரூ.50 ஆயி​ரம் அப​ரா​த​மும் விதித்து நீதி​பதி தீர்ப்​ப​ளித்​தார்.​

அப​ரா​தத்தை கட்​டத் தவ​றி​னால் கூடு​த​லாக ஓர் ஆண்டு சிறைத் தண்​டனை அனு​ப​விக்க வேண்​டும் என்​றும் நீதி​பதி உத்​த​ர​விட்​டார்.​

மோசடியில் ஈடுபட்ட தெல​கி​யின் கூட்​டா​ளி​கள் 21 பேருக்கு 7 ஆண்​டு​கள் சிறைத் தண்​ட​னை​யும் ​ ரூ.10 ஆயி​ரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.​

சிறப்பு நீதி​மன்​றத்​தின் இந்​தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​மு​றை​யீடு செய்ய உள்ளதாக தெல​கி​யின் வக்கீல் சங்​க​ரப்பா தெரி​வித்​தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+