அதிமுக பந்தலுக்கு தீ வைபபு-நெல்லையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை பேட்டையில் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுகவினர் அமைத்திருந்த பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் ஜெயலலிதா பிறந்த நாளை ஓட்டி நேற்று அதிமுகவினர் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். பேட்டை 48வது வார்டில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, துணை செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி மாநகராட்சி மருத்துவமனை அருகே பந்தல் போடப்பட்டிருந்தது. இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் அந்த பந்தலுக்கு தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர். இதனை யாரும் கவனிக்க வில்லை. இதனால் பந்தல் முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து 48வது வார்டு அதி்முக செயலாளர் அப்துல்லா பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications