For Daily Alerts
Just In
மிலாடி நபி - 27ம் தேதி மதுக் கடைகளை மூட உத்தரவு
சென்னை: நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாடி நபியையொட்டி பிப்ரவரி 27ம் தேதியன்று மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27ம் தேதி மிலாடி நபி எனப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில்,
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 27ஆம் தேதியன்று மதுக்கடைகள், ஹோட்டல்கள், மற்றும் கிளப்புகளில் உள்ள பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, February 25, 2010, 13:22 [IST]