குமரி: கடலோர கண்காணிப்புக்கு ரூ.2.30 கோடியில் நவீன படகு
கன்னியாக்குமரி: குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கவும் கடலோர காவல்படை சார்பில் 1.5 கோடி செலவில் நவீன படகு வாங்கப்பட்டுள்ளது.
50 கடல் மைல் வேகம் கொண்ட இந்த படகு கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ரோந்து படகை சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 44 கடற்கரை கிராமங்கள் உள்ளன.
இந்த கடற்கரை வழியாக தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவாமல் இருக்கவும், கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கவும் தமிழக அரசு சார்பில் நவீன ரோந்து படகு வாங்கப்பட்டுள்ளன. 5 டன் எடை கொண்ட இந்த ரோந்து படகு கடலோர எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும்.
மேலும் ரோந்து பணிக்கு வசதியாக விரைவில் ரூ.2.30 கோடி செலவில் 12 டன் எடை கொண்ட அதிநவீன விரைவு ரோந்து படகு வாங்கப்பட உள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications