ஏரியில் மூழ்கிய குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏரியில் மூழ்கி பலியான 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மனூர் மதுரா கீழச்சேரி கிராமத்தில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்ற முனுசாமி மகள் சந்திரகலா(9), மகன் மணிகண்டன்(8), அழகேசன் மகள் காயத்ரி ஆகிய மூவரும் ஏரியில் இறந்துவிட்டனர்.

இதுகுறித்த தகவல் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. காயத்ரி தேவி மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து பலியானோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

இதற்கான அரசாணையை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+