பள்ளிக் கல்விக்கு பட்ஜெட்டில் 16% கூடுதல் நிதி!
Subscribe to Oneindia Tamil

இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் ரூ.4,236 கோடி அதிகம். அதாவது 16 சதவீதம் நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 13வது நிதிக் கமிஷன் வழங்கும் மானியமாக மாநில அரசுகள், ஆரம்பக்கல்விக்காக ரூ.3 ஆயிரத்து 675 கோடி பெறும்.
இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி கற்பற்கான உரிமையை வழங்கும் சட்டத்தின் கீழ், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி, பாரபட்சமற்ற முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
தேசிய அளிவில், சர்வ சீ்க்ஷா அபியான் திட்டம் மிகவும் பாராட்டத்தக்க முறையில் செயல்படுவதாகவும், ஆரம்பக் கல்விக்கான கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications