பட்ஜெட் எஃபெக்ட்: 400 புள்ளிகள் உயர்ந்த பங்குச் சந்தை!
Subscribe to Oneindia Tamil
மும்பை: நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் நடுத்தர மக்களின் பல்ஸை இறங்க வைப்பதாக இருந்தாலும், பங்குச் சந்தை குறியீட்டெண்களை கிர்ரென்று உயர்த்தி விட்டது.
இன்று பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை படிக்கத் துவங்கியதுமே மளமளவென்று 400 புள்ளிகள் வரை சென்செக்ஸில் புள்ளிகள் உயர்ந்தன.
குறிப்பாக தொழில் துறைக்கான வரிச்சலுகைத் திட்டங்களை அவர் படிக்கப் படிக்க சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்ததை, செபி கட்டடத்துக்கு வெளியில் நின்று பார்த்தபடி இருந்த முதலீட்டாளர்கள், தரகர்கள் கைதட்டி வரவேற்றனர்.
ரிலையன்ஸ், எஸ்பீஐ, ஹிண்டால்கோ பங்குகளின் விலை உயர்ந்தபடி இருந்தன. பிற்பகலில் சென்செக்ஸ் 16600 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை நி்ப்டியில் 120 புள்ளிகள் உயர்ந்தன.












Click it and Unblock the Notifications