பெட்ரோல், டீசலுக்கான வரி உயர்வு, சுங்க வரி உயர்வால் அரசுக்கு ரூ. 40,000 கூடுதல் வருவாய்
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி உயர்வு, பிற சுங்க வரி உயர்வு காரணமாக அரசுக்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.
அதேசமயம், வருமான வரி உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுமாம்.
ரூ. 40,000 கோடி கூடுதல் வருவாயில், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு மூலமாக மட்டும் ரூ. 26,000 கோடி கிடைக்கும். மீதமுள்ள ரூ. 14,000 கோடி வருவாய், பிற சுங்க வரி உயர்விலிருந்து கிடைக்கும் என்று வருவாய்த்துறை செயலாளர் சுனில் மித்ரா கூறினார்.
இதேபோல 8 புதிய பிரிவுகள் மற்றும் 4 புதிய பிரிவுகள் மூலம் சேவை வரி மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் ரூ. 3000 கோடியாக இருக்கும். அதேபோல, நிலக்கரி மீதான வரி விதிப்பின் மூலம் ரூ. 2000 கோடி கூடுதலாக கிடைக்குமாம்.
இப்படி அரசுக்கு கூடுதல் வருவாய் வந்தாலும் கூட வருமான வரி உச்சரவரம்புச் சலுகையில் தளர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி இழப்பு ஏற்படுமாம்.
--












Click it and Unblock the Notifications