சிறுதாவூர் நில அபகரிப்பு விவகாரம்- கருணாநிதியிடம் அறிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: சிறுதாவூர் நில அபகரிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியன் தனது அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினார்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் இறுதியில், 813 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் சிவசுப்ரமணியன் அளித்துள்ளார்.

தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து அங்கு பங்களா கட்டியதாக புகார் எழுந்தது. இந்த பங்களாவில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்பு தங்குவது வழக்கம். இதனால் ஜெயலலிதா மீது சர்ச்சை எழுந்தது.

ஆனால் தனக்கும், இந்த பங்களாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சிவசுப்ரமணியன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தலித் நிலம் அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். புகார்தாரர்கள் உள்பட 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் நீதிபதி சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+