காஷ்மீர், பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் சில பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 என பதிவாகியது. ஆனால், இந்த பூகம்பத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று ஸ்ரீநகரில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில், பூமிக்கு அடியில் 93 கி.மீ ஆழத்தை மையமைக கொண்டு ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், பாகிஸ்தானில் திர், ஸ்வாட், புனிர், மலாகாண்ட் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
இங்கு ஏற்பட்ட பூகம்ப அதிர்வு ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகியிருந்தது.
பாகிஸ்தானிலும் பாதிப்பு குறித்த தகவல்கள் இல்லை. எனினும் பெஷாவர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் பீதியடைந்து குரான் புத்தகத்தை கையில் பிடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
--












Click it and Unblock the Notifications