முல்லை பெரியாறு: வக்கீலுக்காக மட்டும் ரூ.22.33 கோடி தமிழக அரசு செலவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்காக, வக்கீல் சம்பளமாக மட்டும் தமிழக அரசு இதுவரை ரூ.22.33 கோடி செலவழித்துள்ளது.

மற்றபடி செலவினங்கள் அனைத்தும் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.48.82 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்காக கேரள போலீசாருக்கான சம்பளத்தை கேரள அரசுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

மேலும் அணைக்கான குத்தகைப் பணமும் முறைப்பட செலுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றிய புள்ளி விவரங்கள், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.

இதன்படி, தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலாளர் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

முல்லைப் பெரியாறு அணைக்காக தமிழக அரசு இதுவரை ரூ.48.82 கோடி செலவிட்டுள்ளது. இதில் 1990 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வழக்கு தொடர்பான வக்கீல் கட்டணமாக மட்டும் ரூ.22.33 கோடி செலவாகியுள்ளது.

1979-2007 காலகட்டத்தில் அணையை பலப்படுத்துவதற்காக ரூ.18.02 கோடி செலவானது.

அணை பாதுகாப்புக்காக இதுவரை கேரள போலீசாருக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் வழங்கியுள்ளது. குத்தகைப் பணமாக 2007ம் ஆண்டு வரை ரூ.72.18 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அணை பாதுகாப்புக்காக கடந்த 1979ல் கேரள போலீசுக்கு அளித்த தொகை ரூ.22 ஆயிரத்து 951ஆக இருந்தது. இந்த தொகை 2005ம் ஆண்டில் 22.51 லட்சமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+