ஜே.பி.ஜே. நிறுவன மோசடி: பெல்லாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: ஜேபிஜே நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும் அந்நிறுவன நிர்வாக இயக்குநரின் மனைவியுமான பெல்லாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாக ஜே.பி.ஜே. நிறுவனம் கவர்ச்சி விளம்பரங்கள் வெளியிட்டது. தவணை முறைத் திட்டங்களும் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜஸ்டின் தேவதாஸ் மீது புகார்கள் கூறப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். சிறிது நாட்களுக்கு பிறகு அவரது மனைவி பெல்லாவும் கைதானார். ஜேபிஜேயின் இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
இந்த நிலையில், ஜாமீன் கேட்டு சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ராமசாமி விசாரித்தார். வழக்கின் இந்த நிலையில் பெல்லாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications