தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தடையாக இருப்போம்-'கள் இயக்கம்' அறிவிப்பு
கோவை: எங்களை அரசு உதாசீனம் செய்தால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தடையாக இருப்போம் என்று தமிழ்நாடு கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் ...
தமிழகத்தில் கள் இறக்க தமிழக அரசு தடையை நீக்க வேண்டும்.
தடையை நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் குழு விசாரித்து, ஆறு மாத காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் மூன்று மாதங்கள் ஆகியும் விசாரணை முடியவில்லை.
எனவே, குழு அறிக்கைக்காக காத்திராமல், அரசியல் சட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, 2009 - 2010 ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையை மதித்து, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.
தமிழகத்தில் பனை, தென்னை தொழிலாளர்கள், விவசாயிகளை காக்கும் பொருட்டு, சில கொள்கை முடிவுகளை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன் அரசு அறிவிக்க வேண்டும்.
இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மது வகைகள் அனைத்தும் தென்னை, பனையை மூலப்பொருளாகக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் நியாயமான வேண்டுகோளை அரசு ஏற்று, கொள்கை முடிவை ஏப்ரல் 30 -க்குள் அறிவிக்க வேண்டும்.
எங்களை அரசு உதாசீனம் செய்தால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தடையாக இருப்போம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications