பங்காரு அடிகளார் பிறந்த நாள்-ரூ.1 கோடி நலத்திட்டங்கள்
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் தனது பிறநத நாளையொட்டி ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடல் ஊனமுற்றோர் 20 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்,14 பேருக்கு காது கேட்கும் கருவிகள், கண்பார்வை பாதிக்கப்பட்ட 100 பேருக்கு தொழில் நடத்த மூலதனப் பொருள்கள், 20 பெண்களுக்கு மாவரைக்கும் இயந்திரங்கள், 51 பேருக்கு தையல் இயந்திரங்கள், 7 பேருக்கு துரித உணவகங்கள் அமைக்க நிதியுதவி, 7 பேருக்கு டீ மற்றும் காபி உணவகங்கள் அமைக்க நிதியுதவி,
ஆயிரம் திருக்குறள் நூல்கள் ,300 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள், மருத்துவ நிதி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.
பள்ளி ஆசிரியராக இருந்த அடிகளார் ஆதிபராசக்தி மீதான பக்தியினாலும் ஆன்மிகப் பணிகளாலும் பங்காரு அடிகளார் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவர்.
மருத்துவக் கல்லூரி உள்பட 12 கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்தி வருகிறார்.
பெண்களுக்கு கோவில்களிலும் முன்னுரிமை கொடுத்து வருபவர். கருவறைக்குள் பெண்களை அனுமதித்து பூஜைகள், வழிபாடுகள் செய்ய வைத்து ஆன்மீக புரட்சி செய்தவர் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications