For Quick Alerts
For Daily Alerts
Just In
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு: காளைகள் மோதி 18 பேர் படுகாயம்
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியகுளம் கண்மாய் திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 420 காளைகள் கலந்து கொண்டன.
நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் மாடுகள் முட்டி தள்ளியதில் 61 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திருச்சி காட்டூரை சேர்ந்த விஜி (22), கல்கண்டார்கோட்டையை சேர்ந்த மணி (24), விஸ்வநாதன் (19) உள்பட 18 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இவர்களில் மணி, விஸ்வநாதன் திருச்சி அரசு மருத்துவமனையிலும் மற்றவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, March 3, 2010, 12:53 [IST]