திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார திருவிழா
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் 178வது அவதார திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அய்யா வைகுண்டர் அவதரித்த திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் 178வது அவதார திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கியது.
அன்று அதிகாலை பணிவிடையும், தொடர்ந்து அன்னபால் தர்மம், பகலில் உச்சபடிப்பு, மதியம் அன்ன தர்மம், மாலையில் திருஏடு வாசிப்பு, அகிலயுக தர்மம் ஆகியவை நடந்தது.
3ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு முகபடிப்பு பணிவிடை, திருஏடு வாசிப்பு, உச்சிபடிப்பு, பணிவிடை, அன்ன தர்மம், ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து இரவு முழுவதும் இன்னிசை மற்றும் பக்தி சொற்பொழிவு நடந்தது. இதில் பாலபிரஜாபதி அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்












Click it and Unblock the Notifications