பென்னாகரத்தில் ஜெயலலிதா 2 நாள் பிரச்சாரம்

பென்னாகரம் இடைத் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பறக்கின்றது.
பென்னாகரம் தொகுதி முழுவதும் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சி நிர்வாகிகள் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு வேடையாடி வருகின்றனர்.
கட்சி நிர்வாகிளை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பென்னாகரத்தில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்யத வண்ணம் உள்ளனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் சேலம் வருகிறார். அங்கு எல்.ஆர்.என். ஓட்டலில் தங்குகின்றார்.
பின்பு அவர் மார்ச் 20 மற்றும் 21 -ம் தேதிகளில் பென்னாகரம் தொகுதியில் கார் மூலம் வாக்காளர்களை சந்தித்து தனது கட்சி வேட்பாளருக்கு ஆதவு திரட்டுகின்றார்.
முதல் நாள் மேச்சேரி வழியாகவும், இரண்டாவது நாள் பாப்பாரப்பட்டி வழியாகவும் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
ஆதரவு கோருகின்றார். ஜெயலலிதா தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகின்றது.
ஜெயலலிதா தற்போது கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வருகிறார். பிரசாரத்திற்காக அவர் பென்னாகரம் வரவுள்ளார்.
பென்னாகரத்தில் அதிமுக சார்பில் மாவட்ட அதிமுக செயலாளர் அன்பழகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications