15 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் மகளிர் மசோதா நாளை நிறைவேற்றம்!
டெல்லி: கடந்த 15 ஆண்டுகளாக இழுபறியாக உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாளை ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்டவை தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் இம்மசோதாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதால் இம்முறை மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது எனத் தெரிகிறது.
இந்திய அரசியல் சாசன சட்டம் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்கியுள்ளது.
ஆட்சி அதிகாரங்களில் அமரவும், தேர்தல்களில் போட்டியிடுவதில் ஆண்-பெண் என்ற பாகுபாடு கிடையாது என்பதை அரசியல் சாசனத்தின் பிரிவுகள் தெளிவாக உறுதிபடுத்துகின்றன.
எனினும் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடுப்படி இல்லை. காரணம் முக்கிய அரசியல் கட்சிகள் அதிக அளவில் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை.
கடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 829 ஆண் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வெறும் 85 மட்டுமே.
லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், முலாயமின் சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் 323 ஆண் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, 28 பெண்களை மட்டுமே தங்களின் வேட்பாளர்களாக களமிறக்கின.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இடம்பெறும் உறுப்பினர்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்களும், பெண்களும் சம அளவில் அங்கம் வகிக்கும் இயல்பான ஜனநாயக பிரதிநிதித்துவ நிலையை 50 ஆண்டுகளாகியும் எட்ட முடியாத காரணத்தால், 33 சதவீத இடஒதுக்கீட்டை மகளிருக்கு வழங்க 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா உருவாக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி காலத்தில் திட்டமிடப்பட்ட இந்த மசோதா கடந்த 1996ம் ஆண்டு தேவகவுடா பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் முதலில் அறிமுகமாகி சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.
அதன் பிறகு பல முறை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் இருந்து வருகிறது. மகளிருக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி ஆகியவை தொடர்ந்து இந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் செய்து வந்தன.
இந்நிலையில் தற்போது இம்மசோதாவை நிறைவேற்றியே தீருவது என காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. நாளை மகளிர் தினத்தன்று ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அறிவித்தார்.
இதையடுத்து பாஜக, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க தொடங்கிவிட்டன.
அனைத்து கட்சிகளையும் முந்திக்கொண்டு செயல்பட்ட பாஜக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாஜவின் கனவு என்று கூறி ராஜ்ய சபா உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்கான கொறடா உத்தரவை முன்னதாகவே வழங்கிவிட்டது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், ஆகாலிதளம், தேசியவாத காங்கிரஸ் என வரிசையாக பல கட்சிகளும் தங்களின் ஆதரவை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.
15 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தற்போது, தனது முடிவை மாற்றிக்கொண்டு மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவின் விருப்பம் வேறு மாதிரி இருந்தாலும், தற்போது மசோதாவை ஆதரிப்பதாகவும், ஆனால் உள் ஒதுக்கீடு அவசியம் என வலியுறுத்துவதாகவும் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
நிதிஷ்குமாரின் இந்த முடிவை காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. ஐஜத, ராஷ்ட்ரிய ஜனதா தளமும், சமாஜ்வாதி தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தும், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கும் தங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
எனினும், நாளை திங்கள் கிழமை ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறுவது உறுதியாகி விட்டது.
ஆனால், அதற்கான பெருமையை யார் தட்டிச் செல்வது என்பதில் தான் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே தற்போது போட்டி நிலவுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications