டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்து கொண்டார் - போலீஸ் கமிஷனர்
சென்னை: மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டபிள்யூ.ஆர்.வரதராஜன், கொலை செய்யப்படவில்லை. நீரில் மூழ்கியே தற்கொலை செய்து கொண்டார் என்று பிரேதப் பரிசோதனையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணம் குறித்து சர்ச்சை எழுந்தது. சமீபத்தில் மக்கள் டிவி செய்தியில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டிருப்பதாகவும் இது கூறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் டிவி அலுவலகத்தைத் தாக்க பதிலுக்கு பாமகவினர் மார்க்சிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கினர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால்தான் அவர் இறந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்துள்ளார்.
தடய அறிவியல் சோதனையில் அவரது வயிற்றில் இருந்து எடுத்த உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மையுள்ள பொருள் எதுவும் இல்லை.
அவரது உடலில் சிறு காயங்கள் உள்ளன. ஆனால் அவற்றால் மரணம் ஏற்படவில்லை. ஏரியில் உள்ள ராட்சத குழாய்களின் வழியாக நடந்து சென்றபோது அவர் கீழே விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
நேற்று மாலை காவல்துறைக்கு பிரேதப் பரிசோதனை வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications