பிரபாகரனைத் தேடி வரும் தமிழ் அமைப்புகள் - இந்தியாவிடம் இலங்கை கவலை!

சமீபத்தில் கொழும்புக்கு வந்திருந்தார் நிரூபமா ராவ். ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா ஆகியோரை அவர் சந்தித்தார்.
தன்னை நிரூபமா சந்தித்தபோது முக்கியமான விஷயம் குறித்து கவலையுடன் விவாதித்தாராம் ரோஹித. அது பிரபாகரன் குறித்த விஷயம் என்கிறார்கள்.
இதுகுறித்து ரோஹித கூறுகையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு தமிழ் அமைப்புகள் சில தீவிரமாக அவரைத் தேடி வருகின்றன. அரசு இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இந்திய அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம். இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் உடனான சந்திப்பின்போது எமது இந்தக் கவலையைத் தெரிவித்தோம்.
இலங்கை தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும். இறைமையைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம்.
சர்வதேச ரீதியிலான விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் குறித்து நாங்கள் கொண்டுள்ள கவலையை நிரூபமாவுக்குத் தெரியப்படுத்தினோம் என்று கூறியுள்ளார்.
'பிரபாகரன்' குறித்த கவலை காரணமாகவே இலங்கை அரசு தொடர்ந்து படை பலத்தை அதிகரித்தபடியும், ஆயுதங்களை குவித்தபடியும் உள்ளதாக கூறப்படுகிறது.
பொட்டு அம்மனுடன் தொடர்பு வைத்திருந்தோர் கைது:
இந் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்பு வைத்திருந்ததாக இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையம் மற்றும் துறைமுகம் வழியாக விடுதலைப் புலிகளுக்கு தேவையான பொருட்களை கடத்த அனுமதித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போர்நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவரும் பொட்டு அம்மான நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர் என்றும் அரசு குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications