ஈரோட்டில் அரசு பஸ் மோதி சூடான் மாணவர் உட்பட 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டு அருகே சாலை விபத்தில் சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர் பரிதாபமாக பலியானார்.
ஈரோட்டில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வருபவர் முஸ்தபா முகதா. சூடான் நாட்டைச் சேர்ந்த இவர் நேற்று கல்லூரியில் இருந்து அறைக்கு ஆட்டோ ரிக்ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோ ரிக்ஷா மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முஸ்தபா முகதாவும், நண்பர் முஸ்தபா செர்டியும், ஆட்டோ டிரைவரும் படுகாயம் அடைந்தனர்.
ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முஸ்தபா முகதா மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications