ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பஞ்சாயத்துத் தலைவர் திடீர் உண்ணாவிரதம்
ஸ்ரீவைகுண்டம்:கருங்குளம் யூனியன் முத்தலாங்குறிச்சியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம பஞ்சாயத்துத் தலைவர் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்களம் பஞ்சாயத்து யூனியனில் முத்தலாங்குறிச்சி பஞ்சாயத்தில் மகளிர் சுகாதார வாளகத்திற்கும், அங்கன்வாடி பள்ளிக்கும் இடையே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கிராம தலையாரி நல்லதம்பி ஆக்கிரமித்து முள் உடை மரங்களை வளர்த்துள்ளார்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த இடத்தில் விளையாட்டு திடல் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகளை எடுத்தபோதுதான் பஞ்சாயத்துத் தலைவர் கந்தசாமிக்கு இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கலெக்டர் தாசில்தார் ஆகியோருக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த மனுநீதி நாளில் கந்தசாமி கொடுத்த மனுவிற்கு அளிக்கப்பட்ட பதிலில் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதைக் கண்டித்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை பஞ்சாயத்து மீட்டு தர கோரியும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு கந்தசாமி நேற்று உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவருடன் விட்டிலாபுரம் கோவில்பத்து பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பால்ராஜ், முத்தலாபுரம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் தங்கபாண்டியன், ஊர்த்தலைவர் லட்சுமணன் ஆகியோர் இருந்தனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் அடர்த்தியாக முட்புதர்கள் உள்ளதால் அருகில் உள்ள மகளிர் சுகாதார வாளகத்திற்குள்ளும், அங்கன்வாடிக்குள்ளும் பாம்புகள் படையெடுப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திடீர் உண்ணாவிரதம் தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications