பொள்ளாச்சியில் போலி பெண் சிபிஐ அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோமங்கலம் அருகே சிபிஐ அதிகாரி போல் நடித்து பலரிடம் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார் சூர்யகலா என்கிற ராஜேஸ்வரி.

இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பிரமுகர்கள், மற்றும் தொழில் அதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்தள்ளார்.

மேலும், ரேஷன் கடைகளில் அதிரடியாக ‌ரெய்டு நடத்தி பண வசூலிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், இவர் ரியல் ‌எஸ்டேட் அதிபர் நந்தகோபால் கிருஷ்ணன் என்பவரையும் மிரட்டி பணம் பறித்தபோது, இவரது நடத்தையில் சந்தேகம் கொண்டு நந்தகோபால் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார் சூர்யகலா என்கிற ராஜேஸ்வரி, சிபிஐ அதிகாரியாக போலி வேஷம் போட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில் போலி பெண் ஐபிஎஸ் அதிகாரி பிடிபட்டார். தற்போது பொள்ளாச்சியில் போலி பெண் சிபிஐ அதிகாரியை காவல்துறையினர் வளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+