சட்டத்தை மதித்து விசாரணைக்கு ஒத்துழைப்பார் மோடி- குஜராத் அரசு

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
அகமதாபாத்: முதல்வர் நரேந்திர மோடி சட்டத்தை மதிப்பவர். சட்ட நடைமுறைகளுக்கு அவர் ஒத்துழைப்பு அளிப்பார் என்று குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) சம்மன் விடுத்துள்ளது குறித்து குஜராத் அரசு கருத்து தெரிவித்துள்ளது.

1000க்கும் மேற்பட்ட முஸ்லீம்களைப் பழிவாங்கிய 2002ம் ஆண்டு நடந்த குஜராத் மதக் கலவரத்தின்போது, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 70 முஸ்லீம்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது குறித்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி., மோடிக்கு நேற்று சம்மன் அனுப்பியது.

இதுகுறித்து குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயநாராயண் வியாஸ் கூறுகையில், முதல்வர் நரேந்திர மோடியும், குஜராத் மாநில அரசும், சட்டத்தின் நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.

சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை குஜராத் அரசு செய்யும் என்றார்.

மார்ச் 21ம் தேதி விசாரணைக்கு வருமாறு முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான எஸ்.ஐ.டி மோடிக்கு உத்தரவிட்டுள்ளது.

ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், மோடியின் தொடர்புகள் குறித்து விசாரிக்குமாறு ராகவன் தலைமையிலான குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்தக் குழு முன்பு ஆஜராகுமாறுதான் தற்போது மோடி பணிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+