ரூ.600 கோடி சொத்துக்களை மறுத்த ப்ரீத்தி ஜிந்தா!

பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் கமால் அம்ரோகி. அவருக்கு ஷந்தர், தஸ்தார் என்ற 2 மகன்களும் ருக்சர் என்ற மகளும் உள்ளனர். ருக்சருக்கு வசீம் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கமால் அம்ரோகியின் மகன்கள்- மகள்- பேரன் ஆகியோருக்கிடையே சொத்துச் சண்டை மூண்டது.
இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடர்ந்தனர் வாரிசுகள்.
அதனால் அம்ரோகி கடும் மனஉளைச்சலில் அவதிப்பட்டார். அம்ரோகிக்கு ஆதரவாக செயல்பட்டார் ப்ரீத்தி ஜிந்தா. தயாரிப்பாளரின் மகன்கள் மகள் இடையேயும் சொத்துத் தகராறை தீர்க்க உதவி செய்து வந்தார்.
ப்ரீத்தியின் நல்ல குணத்தால் கவரப்பட்ட அம்ரோகியின் மூத்த மகன் ஷந்தர், ப்ரீத்தியை தனது வளர்ப்பு மகள் என்று அறிவித்து விட்டார். அத்துடன் தந்தையின் சொத்து தனக்கு கிடைக்க ஆதரவாக இருந்து வரும் ப்ரீத்திக்கு ரூ.600 கோடி சொத்துகள் மற்றும் வர்த்தகத்தை முழுவதுமாக எழுதி வைக்கப் போவதாக அதிரடியாக அறிவித்தார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த ப்ரீத்தி ஜிந்தா இந்த சொத்துக்கள் எதுவும் தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தயாரிப்பாளர் கமால் அம்ரோகியின் சொத்துக்களுக்கு எந்த வகையிலும் நான் வாரிசு இல்லை. சொத்து முழுவதும் அவரது சொந்த வாரிசுகளைச் சேர்ந்தது. அதில் எனக்கு எதுவும் வேண்டாம். நான் எப்போதும் போல முடிந்தவரை உதவியாக இருக்கவே விரும்புகிறேன்!" என்றார்.
ப்ரீத்தியின் இந்த மறுப்பு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது பாலிவுட்டில்.












Click it and Unblock the Notifications