காங்.எம்.பிக்கள், மனைவியருக்கு விருந்தளித்த சோனியா காந்தி
டெல்லி: மகளிர் மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ள நிலையில் நேற்று இரவு காங்கிரஸ் எம்.பிக்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் விருந்தளித்துக் கெளரவித்தார் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
அமைச்சர்களும் தங்களது மனைவியருடன் இதில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
ராகுல் காந்தியும் கூட இதில் கலந்து கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, ஜன்பாத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாக இந்த விருந்து நிகழ்ச்சிக்கு எம்.பிக்கள், அமைச்சர்களுடன், அவர்களது மனைவியரும் அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய அளவில் அதேசமயம் படு இனிமையானதாக விருந்து இருந்ததாக அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். வெஜிட்டேரியன் மற்றும் நான் வெஜிட்டேரியன் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கும் சற்று கூடுதலாக விருந்து நீடித்தது.
இந்த விருந்து நிகழ்ச்சியின்போது மகளிர் மசோதாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்று ஒரு மூத்த உறுப்பினரிடம் கேட்டபோது, அதற்கெல்லாம் நேரமே இல்லை. வெறும் விருந்து மட்டும்தான் நடந்தது என்றார்.












Click it and Unblock the Notifications